முதலையின் வாயில் கையை விட்ட இளைஞன்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
முதலை ஒன்றை காப்பாற்றுவதற்காக அதன் வாயில் இளைஞர் ஒருவர் கையை விட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கவடயாகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை நதியில் 13 அடி உயரமான முதலை ஒன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.
கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டிலை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

முதலையை கரைக்கு கொண்டு வந்ததும் உதார சஞ்சீவ என்ற இளைஞன் முன் வந்து முதலையின் வாயில் கையை வைத்து கேபிள்களால் தயாரிக்கப்பட்ட தூண்டிலை வெளியே எடுத்துள்ளார்.
மரத்தில் முதலையைப் பாதுகாப்பாகக் கட்டி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தூண்டிலை அகற்ற அவருக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளன.
இவ்வாறு காப்பாற்றப்பட்ட முதலை பின்னர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri