விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்: பொலிஸார் அசமந்தம்
வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதிதீவிர சிகிச்சையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா - மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை மூன்று மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிக்றார்.
குறித்த விபத்தில் சிக்கிய மூன்று மோட்டர் சைக்கிள்களும் வவுனியா பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டுள்ள போதும் இதுவரை எவரும் விபத்து தொடர்பில் கைது செய்யப்படவில்லை என விபத்தில் படுகாயமடைந்துள்ள இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து மன்னார் வீதி வழியாக குருமன்காடு, குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், பெண்ணொருவர் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வீதி ஒன்றில் திரும்ப முற்பட்ட போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சுயநினைவு இழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த இரு நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா, கனேசபுரம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலசுப்பிரமணியம் டயாந்தன் என்பவரே சிகிச்சை பெற்று வருபவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரிடம் இளைஞரின் உறவுகள் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிளில் வைத்தியர் என அடையாள முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் அதில் பயணித்தது வைத்தியரின் மனைவி என்றும் குறித்த வைத்தியர் தனக்கு இருக்கும் செல்வாக்கால் விசாரணையை தடுத்து வைத்துள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்களால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த விடயம் தொடர்பில் இன்று (04.12) முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், இதையடுத்து சம்மத்தப்பட்ட போக்குவரத்து பொலிஸாரை அழைத்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், விபத்துக்குள்ளான மூன்று மோட்டார் சைக்கிள்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் சுய நினைவு இல்லாமல் இருப்பதால் அவருடைய வாக்கு மூலத்தை பெறமுடியவில்லை எனவும் இருந்தும் தாம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

கேன்ஸ் பட விழாவில் ஆடையில்லாமல் தவித்த நடிகை பூஜா ஹெக்டே - சாப்பிட முடியாமல் தவித்த பரிதாப நிலை! Manithan

பேஸ்புக் காதல் மயக்கம்! ரகசிய கோப்புகளை பெண்ணுக்கு அனுப்பிய ராணுவ வீரர்! பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை News Lankasri

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022