400 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞன்: சிதறிக் கிடந்த உடல்
மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த இளைஞன் கடந்த 15 ஆம் திகதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

இதன் பின்னர், இந்தக் குழு நேற்று (16) காலை 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வேளையில் உயிரிழந்தவர் திடீரென ஓடத் தொடங்கி பின்னர் தாழ்வான காட்டுப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் உடலின் பாகங்கள் காட்டுப் பகுதியில் சிதறிக் கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri