இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த இளைஞன் கைது
இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த இளைஞரொருவரை முள்ளியவளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பலர் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ,மாவட்டங்கள் தோறும் தேடுதல் மேற்கொண்ட அரச புலனாய்வு பிரிவினர் முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் வந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.