கிணற்றில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் (10.05.2023) ஆம் திகதி பதிவாகியுள்ளது.
சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது பின்னர் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
