யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது.
டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம்(8) காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam