இளம் தம்பதியினரின் மோசமான செயல்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
தவறான காணொளிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
விசாரணையின் போது, கொள்ளுப்பிட்டியில் முன்னர் வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு தம்பதியினர் இருந்ததும் அவர்கள் மோசடியில் நேரடியாக ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட தம்பதியர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா கலந்த மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
