வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் அம்பலம்
கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் போது இந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.
05 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹகல, ஹுங்கம, எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரசிக சம்பத் என்ற 30 வயதுடைய சந்தேக நபரும் 25 வயதுடைய அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள்
வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டிலிருந்து கடத்தல்காரரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் சந்தேக நபர்களால் ஹெரோயின் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று பெல்மடுல்ல, பலாங்கொடை பகுதியில் கடத்தல்காரரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் போதைப்பொருள் பொதிகளை நுட்மாக வைத்து அந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளிநாட்டிற்கு உள்ள நபருக்கு அனுப்பி வைப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், 25 வயதுடைய சந்தேக நபரின் மனைவியின் பெயரில் மீரிகம இலங்கை வங்கிக் கிளையின் கணக்கில் நாளாந்தம் 15,000 ரூபாவை வரவு வைப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
