கொழும்பில் 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது
கொழும்பு - மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 61 வயதான கொத்தனார் உட்பட மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |