நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.
முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் சந்திரசேகரனின் ஜனன தினத்தை முன்னிட்டு 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற தொனிப்பொருளில் இந்த இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.