முக்கிய வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சிக்கு விடுதலை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை செய்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட டெய்சி பாரஸ்ட் விசாரணைக்கு முகங்கொடுக்க மனரீதியாக தகுதியுள்ளவரா என்பது குறித்து கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியால் சிறப்பு மனநல அறிக்கை கோரப்பட்டது.
விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை
மருத்துவ பரிந்துரைகள்
குறித்த அறிக்கையை துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரதிவாதி விசாரணையை எதிர்கொள்ள மனரீதியாக தகுதியற்றவர் என்று கூறி மருத்துவ பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உண்மைகளை பரிசீலித்த பிறகு, நீதிபதி டெய்சி ஃபாரெஸ்ட்டை அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam