கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்
யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டடம் ஒன்றிற்குள் இருந்து விரல்களைக் கொண்டு அமைதிச் சின்னத்தைக் காண்பிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த சந்திப்பிலோ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ அல்லது யார் இந்த புகைப்படத்தை எடுத்தார்கள் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த புகைப்படம் தொடர்பில் ஆராய்ந்து ஊடகங்களுக்கு அறிவிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பணமோசடி
யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பின்னர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யோஷித, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானையில் காணி ஒன்றுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பில் ராஜபக்ச சனிக்கிழமை பெலியத்தவில் கைது செய்யப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு 5ம் இலக்க நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித மீது குற்றம் சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பது உறுதியானதை அடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam