இவ்வருடமும் மாகாண சபைத் தேர்தல் இல்லை!
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடமும் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது.
'த மோர்னிங்' ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில,
1988 ஆம் ஆண்டின் எண் 2 மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்படாததால், மாகாண சபை தேர்தல் இந்த வருடத்துக்குள் நடைபெற வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலும் 2022 இல் நடைபெறும் வாய்ப்புகளே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு இறுதி முடிவை எட்டுவோம் என்று நம்புகின்றோம் என்றும், எதிர்வரும் 19 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அரச பங்காளிகளின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.
இதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்பாலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam