போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகளை தண்டிப்பது தவறு - நாமல் ராஜபக்ச
போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பிள்ளைகளை விளக்கமறியலில் வைத்து பொலிஸ் அறிக்கையை வழங்கி, அவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவிருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வது தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு செயலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் வெலிமடையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் இதனை கூறியுள்ளார்.
போராட்டத்தை வழி நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

போராட்டத்தை வழி நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உதவி, ஒத்தாசைகளை வழங்கியவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனினும் போராட்டம் என்ற அலைக்கு ஏமாந்து சென்ற பல பிள்ளைகளை உள்ளனர்.தவறாக வழிநடத்தப்பட்ட பல பிள்ளைகள் இருக்கின்றனர். போராட்டத்தை பார்க்க சென்ற பலரும் இருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரயோசனமில்லை.போராட்டம் என்ற அலை காரணமாக அதில் கலந்துக்கொண்ட பிள்ளைகளை வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பது பலனளிக்காத விடயம்.
வழி தவறிய இளைஞர்களை வேலைத்திட்டத்தின் ஊடாக சமூகமயப்படுத்த வேண்டும்

இந்த பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்ல பொலிஸ் அறிக்கைகளை பெற முடியாத நிலைமையை ஏற்படுத்தினால், அது நியாயமானது அல்ல.இதனால், போராட்டத்திற்கு ஏமாந்து வழி தவறிய இளைஞர்களை ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக சமூகமயப்படுத்த வேண்டும்.
நாட்டில் சுதந்திரம் இருப்பது போல் நாட்டை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் மீது தாக்குதல் நடத்தியதை நாம் கடந்த காலத்தில் பார்த்தோம். எமது வீடுகளை தீயிட்டால் பரவாயில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரையும் தாக்கினர்.

கொள்ளைச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதுடன் பாதாள உலக குழுவினர் தலைதூக்கியுள்ளனர். இவற்றை அடக்கி ஒடுக்கவில்லை என்றால் இந்த நாடு என்றுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாது.
தமது வீடு, தமது மனைவியின் வீடு, தமது தந்தையின் வீடு உட்பட வீடுகளுக்கு தீவைக்கும் சம்பவங்களை வழிநடத்திய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan