பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த இந்திய வீரர்: மோடியை குறிப்பிட்டு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய டுவீட்
இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தெரிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் மீது, மல்யுத்த வீராங்கனைகள் உடலியல் அத்துமீறல் குற்றச்சாட்டினை முன்வைத்து முறைப்பாடு அளித்தமை தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தலை இந்தியா நடத்தியது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வீராங்கனை சாக்ஷி மாலிக், அத்துமீறல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினாரான சஞ்சய் சிங் தலைவராக தெரிவி செய்யப்பட்டதை என்னால் ஏற்க முடியாது.
இந்திய பிரதமரை குறிப்பிட்டு டுவீட்
எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। ?? pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia ?? (@BajrangPunia) December 22, 2023
இதனைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக பேசிய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என இந்திய பிரதமரை குறிப்பிட்டு டுவீட் செய்த்துள்ளார்.
அவரது பதிவில், ''புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்'' என காட்டமாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
