மிக மோசமாக நடத்தப்பட்ட நோயாளி! ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சம்பவம்

Batticaloa Hospital Patients
By Kumar Nov 15, 2021 11:36 AM GMT
Report

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி மிக மோசமான முறையில் நடாத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை அன்று மயங்கி விழுந்த 63 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் சரியாக மதியம் 12 மணிக்கு ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நோயாளிக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டு கோவிட் தொற்று இல்லை என முடிவு வந்ததன் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சேலைன் வழங்கப்பட்டது.

நேயாளிக்கு அந்த நேரத்தில் சிறுநீர், மலம் தானாக வெளியேறிய நிலையில் நோயாளியின் உறவினர்கள் துப்பரவு செய்ய பல தடவைகள் முயற்சி செய்தும் நோயாளி மயக்கமாக இருந்த காரணத்தால் முடியாமல் போயுள்ளது.

நோயாளியை துப்பரவு செய்து அவரை நோயாளர் விடுதிக்கு அனுப்புவதற்கு வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் யாரும் முன்வராத நிலையில் நோயாளியை கட்டிலுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அநாதரவாக விட்டிருக்கின்றனர்.

முற்பகல் 12 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நோயாளி  அப்படியே குறித்த பகுதியில் கைவிட்ட நிலையில் இருந்துள்ளார்.

அதன் பின்னர் நோயாளியின் வீட்டில் இருந்து சென்ற நான்கு உறவினர்கள் நோயாளியை வேறு கட்டிலுக்கு மாற்றி நோயாளியை துப்பரவு செய்து கழுவி நோயாளர் விடுதியில் ஒப்படைத்துள்ளனர்.

சுமார் 7 மணித்தியாலங்கள் குறித்த பெண் நோயாளியை   அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே யாரும் கவனிப்பாரற்ற நிலையில் வைத்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த நோயாளி ஒரு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு எந்த வித சிகிச்சையும் வழங்காது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்போவதாக வைத்தியசாலையினால் தெரிவிக்கப்பட்டு அவரை அம்புயுலன்சில் ஏற்றுவதற்கு நான்கு ஆண்களை கூட்டிவருமாறு அங்குள்ள தாதியர்கள் கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் நோயாளியின் இரண்டு உறவினர்கள் குறித்த நோயாளியை அம்பியுலன்ஸில் ஏற்றுவதற்கு தாதியர்கள் ஒத்துழைப்பு வழங்க வில்லையெனவும், நோயாளியான தனது தாயை மகள் மிகவும் கஸ்டப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றிய போது ஏனைய தாதியர்கள் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அம்பியுலன்ஸில் நோயாளியை ஏற்றிய பின்னர் நோயாளியை இறக்குவதற்கு இரண்டு ஆண்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு அம்பியுலன்ஸில் பயணித்த தாதியர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏறாவூரில் இருந்து இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு போவதற்குள் அம்பியுலன்ஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று விட்டது.

நோயாளியை இறக்குவதற்கு ஆட்களை கூட்டி வரவில்லை என்று நோயாளியின் மகளுக்கு ஏறாவூரில் இருந்து அம்பியுலன்ஸ்சில் வந்த தாதிய பெண் மிக மோசமான முறையில் ஏசியுள்ளார்.

ஏற்கனவே ஒரு நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்களது உறவினர்கள் நான்கு பேர் கூட செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே ஏறாவூர் வைத்தியசாலை நிர்வாகம் கூறியிருந்தால் அந்த நோயாளியின் உறவினர்கள் முன் கூட்டியே நான்கு உறவினர்களை கூட்டிச் சென்றிருப்பார்கள்.

அத்துடன் வைத்தியசாலையில் இருக்கும் நோயாளி மலம், சிறுநீர் கழித்தால் அதனை உறவினர்கள் நான்கு பேர் சென்றுதான் துப்பரவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் 7 மணித்தியாலங்கள் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சை இன்றி கிடந்திருக்க தேவையில்லை.

இலங்கையில் மருத்துவத் துறையில் உள்ள மிக மோசமான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.

மனிதாபிமான சேவை நோக்கத்துடன் செயற்பட வேண்டிய வைத்தியசாலைகளை நம்பி எப்படி சாதாரண மக்கள் மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

சம்பள உயர்வு மற்றும் ஏனைய சலுகைகளை கோரி போராடும் சுகாதார துறை ஊழியர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்கின்றார்களா என்பதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US