மோசமான சர்வதேச குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா.? ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை கேலிக்கூத்து

International crimes
By Independent Writer Jan 25, 2021 08:56 PM GMT
Report

மோசமான சர்வதேசக் குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டவை மிகவும் கேலிக்கூத்தானதாகவும், ஏமாற்றுத்தனமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும் உள்ளது.

இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற மற்றும் நேரத்தை வீணடிக்கும் ஒன்று மாத்திரமே. அத்துடன் அதற்கு நம்பகத்தன்மை வழங்கப்பட்டால் அது ஐ.நாவின் முழு நடவடிக்கையையுமே பலவீனமாக்கும் என தென்னாபிரிக்காவின் இடைநிலை நீதி அதிகாரியும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமை மீறல்கள் உண்மையில் நாட்டில் இடம்பெற்றதை கடந்த கால விசாரணைகள்,ஆணைக்குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதை ஆறு மாத காலத்துக்குள் கண்டறிவதற்கு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்னுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் 30/1 தீர்மானத்தின் கீழ் மீள் இணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஈடுபாடுகளை இலங்கை நடைமுறைப்படுத்துவது பற்றிய மீள்பார்வையில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் சபையால் 2015 இல் ஆணையிடப்பட்ட ஒரு விசாரணையானது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதற்கான ஒரு போதிய தொடக்க நிலை உள்ளதை உறுதி செய்ததுடன், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றைச் செய்வதில் அரசின் பங்கையும் தெளிவாக எடுத்துக்காட்டியது.

இதுவரை விசாரிக்கப்படாத கடுமையான மீறல்கள் மற்றும் குற்றங்கள் புரியப்பட்டதை அரசே குறிப்பாக ஏற்றுக்கொண்டமையால் மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளது.

01) மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள், குழுக்கள் ஏதாவது மனித உரிமை மீறல்கள், பாரிய சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இது போன்ற வேறு ஏதாவது குற்றங்கள் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டுபிடித்தல்.

02) பாரிய மனித உரிமை மீறல்கள், பாரிய சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்மற்றும் ஏனைய இது போன்ற குற்றங்கள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் என்ன கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை அடையாளம் காணுதல் மற்றும் இங்கு கூறப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஏதாவது சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அடையாளம் காணுதல்.

03) தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் என்ன முறையில் இந்தச் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன? அத்துடன் தற்போதைய அரச கொள்கையின் அடிப்படையில் அந்தச் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?

கடந்த கால ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்கள் என்ன என்பதையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பதையும், புதிய ஆணைக்குழுவை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.

OHCHR இனுடைய விசாரணையின் ((A/HRC/30.CRP.2) சிபாரிசுகளைக் கொண்ட 4 பக்கங்களை சாதாரணமாக மீள்பார்வை செய்ய வேண்டிய அதேவேளையில், கடந்த கால ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்களை அடையாளம் காண்பதற்கு ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்பது கேலிக்கூத்தானதாகும்.

நடைமுறைப்படுத்தல் என்பது இதுவரை இடம்பெறவில்லை என்பது போதியளவுக்கு தெளிவாக உள்ளது. அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் தமது சொந்த மக்கள் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் சபை உட்பட்டவற்றுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஈடுபாடு பற்றி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார்கள்.

தீர்மானம் 30/1 மற்றும் அடுத்து வந்த தீர்மானங்களும் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் பொறுப்புக்கூறல், தேசிய நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தலை ஊக்குவிப்பதற்கு இடை கால நீதிக்கான ஒரு விரிவான முழுமையான திட்ட வரைவை உருவாக்கியது.

மீளாய்வு செய்யப்பட வேண்டிய மீறல்கள் பற்றிய எந்தக் காலவரையறையும் கொடுக்கப்படாமல் இலங்கையின் இந்தப் புதிய ஆணைக்குழுவின் விதிமுறைகள் தெளிவற்ற முறையில் எழுதப்பட்டுள்ளன.

குற்றங்கள் புரியப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக முக்கிய பணியாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மனிதராலேயே நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவானது இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஒரு வாசிப்பு குழுவினை விட கொஞ்சம் பரவாயில்லை.

இந்த புதிய ஆணைக்குழுவானது ஒரு நீதிபதியால் தலைமை தாங்கப்படுகின்றது. இந்த நீதிபதி ஐக்கிய நாடுகளில் இலங்கையை தற்காத்துக் கொள்வதில் குறைந்தது 4 சந்தர்ப்பங்களில் கடந்த காலத்தில் அவர் ஆற்றிய பணி தொடர்பில் பல நலன்முரண்பாட்டுப் பிரச்சினைகள் உள்ளன.

ஒரு சந்தர்ப்பத்தில் AHMD நவாஸ் ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்த போது ஜெனிவாவில் ஐ.நா. நிபுணர் குழுவின் தவறான அறிக்கை முன்வைக்கப்படுவதற்கு ஒரு எதிரான நகர்வை மேற்கொள்ளவே இந்த தூதுக்குழு அங்கு சென்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் விடயம் பற்றி தனக்கு அறிக்கை தருமாறு இந்த ஐ.நா. குழுவானது பொதுச் செயலாளர் பான் கீ - மூனால் உருவாக்கப்பட்டது.

போர் மற்றும் சமாதானத்தின் போது ஒவ்வொருவரினதும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச சட்ட ஆட்சி முழுவதும் மீதான ஒரு பாரிய தாக்குதலையே போர் நடாத்தப்பட்ட முறையானது பிரதிபலிப்பதாக அந்தக் குழு முடிவு செய்தது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இறுதியில் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்கு வழிவகுத்தது. இந்த விசாரணையானது 30/1 தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதுடன், இது தற்போது இலங்கை பற்றிய மீள்பார்வையை இப்போது அவசியமாக்கியுள்ளது.

தான் பகிரங்கமாகவே எதிராக வாதாடிய ஐ நா. அறிக்கைகளை இந்த ஆணைக்குழுவின் தலைவரால் நடுநிலைமையான முறையில் விசாரிக்க முடியாது. இதை விட அரசைப் பாதுகாக்கும் சட்டத்தரணியாகவும், அத்துடன் வழக்கறிஞராகவும் இரட்டைப் பணியாற்றுவதாக முற்றிலும் விமர்சிக்கப்படும் அவர் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் அங்கம் வகிக்கின்றார்.

இந்தப் புதிய ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட இன்னுமொருவர் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. இவர் அண்மைய காலம் வரை அரசியல் மயமாக்கல் பற்றிய அரசியல் மயமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக இருந்தார்.

சென்ற அரசின் கீழ் கொண்டவரப்பட்ட அரசியல் மயமாக்கல் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவங்கள் பற்றிய அவரது அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.அரசியல் மயமாக்கல் பற்றிய ஆணைக்குழுவுக்கு முன்னால் கொண்டுவரப்பட்ட பல சம்பவங்களை அவர் விசாரிப்பார் என்பதால் அது இந்தப் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினரான பெர்னாண்டோவும், நலன் முரண்பாட்டைக் கொண்டிருப்பார்.

பெர்ணாண்டோ 2004 ஆம் ஆண்டு ஜூன் வரை பொலிஸின் தலைவராக இருந்தார் என்பதால் அந்தக் காலப் பகுதியில் பொலிஸ் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கையில் அவர் பாரபட்சமற்றவராகவும், சுயாதீனமானவராகவும், செயற்படுவது கடினமானதாக இருக்கும்.

இவர் பதவியில் இருந்த போது விசாரணைகளைத் தலைமை தாங்குவதில் அவர் தோல்வி கண்டது பற்றி கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள செயற்பாட்டாளர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.

இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற மற்றும் நேரத்தை வீணடிக்கும் ஒன்று மாத்திரமே.அத்துடன் அதற்கு நம்பகத்தன்மை வழங்கப்பட்டால் அது ஐ.நாவின் முழு நடவடிக்கையையுமே பலவீனமாக்கும் என்றுள்ளது.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US