இலங்கையில் மோசமடையும் சிவில் நிலைமைகள்! சுவிஸின் புகலிட நடைமுறைகளை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

Request to review Swiss asylum practices
By Independent Writer Feb 14, 2021 05:25 AM GMT
Report

சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கோரியுள்ளது.

குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty)சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கை அகதிகளுக்குத் தஞ்சம் வழங்குதல், அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் தொடர்பான நடைமுறை களை சுவிஸ் சமஷ்டி அரசின் குடியேற் றத்துக்கான செயலகம்(State Secretariat for Migration- SEM) மீளப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நல்லிணக்க நிலைமை தோன்றியதை அடுத்து கடந்த 2016, 2018 ஆண்டுகளில் அன்றைய சிறிசேன அரசுடன் சுவிஸ் அரசு பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருந்தது.

தொழில் நிமித்தம் குடியேறுவோர், அகதிகள், தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளைத் திருப்பி அனுப்புதல், குடியேறிகள் பரிமாற்றம் ஆகியனவற்றை உள்ளடக்கிய அந்த உடன்படிக்கைக்கு அது கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட சமயத்தில் சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பும், சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

அண்மையில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட இலங்கை நிலைவர அறிக்கை இலங்கையர் களுக்குத் தஞ்சம் வழங்குகின்ற உறுப்பு நாடுகள் தங்கள் புகலிடக் கொள்கைகளை மீளப் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அகதிகள் நலன் பேணும் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு கைது, சித்திரவதை போன்ற மீறல்களுக்கு மீண்டும் ஆளாக நேரிடலாம் என்று அந்த அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

சுவிஸ் நீதி அமைச்சின் தகவலின்படி அந்நாடு சுமார் 51 ஆயிரம் இலங்கை அகதிகளுக்குப் புகலிடம் வழங்கி உள்ளது. அவர்களில் அரைவாசிப் பங்கினர் சுவிஸ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

மொத்த இலங்கை அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈழத் தமிழர்கள் ஆவர்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US