இலங்கை - பங்களாதேஷ் போட்டி நடப்பதில் சிக்கல்: வெளியான காரணம்
நாளை இலங்கை – பங்களாதேஷ் போட்டி நடப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் காற்று மாசுபாடு
குறித்த தகவலை பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மோசமான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டெல்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri