'வாழும் போதே வாழ்த்துவோம்' மன்னாரில் இடம்பெற்ற உலகத் தமிழர் விருது வழங்கும் விழா (video)
'வாழும் போதே வாழ்த்துவோம்' என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் 'உலகத் தமிழர் விருது வழங்கும் விழா' இன்று(25.02.2023)இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
கலைஞர்களுக்கு விருது
இதில் 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் 180 கலைத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறப்பான முறையில் கலையை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கும் நடிகர்கள் மற்றும் பாடல் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களும் சான்றிதழ் வழங்கி,பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புனித வெற்றி நாயகி ஆலயம் பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவருமான ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்,புரவலர் ஹாசிம் உமர்,உட்பட மதத் தலைவர்கள் கலந்துக்கொண்டு விருதுகளையும் கௌரவத்தையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.