துபாயில் அமைக்கப்படவுள்ள உலகிலேயே மிக பெரிய விமான நிலையம்
துபாயில்(Dubai) உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமான நிலையம் தொடர்பில் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) தெரிவித்துள்ளதாவது,
புதிய விமான நிலையம்
“தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் உலகின் மிக பெரிய விமான நிலையமாக அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் புதிய விமான நிலையமானது 35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்படவுள்ளதுடன் தற்போதைய சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக அமைக்கப்படவுள்ளது.
இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகள் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சுமார் 260 மில்லியன் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக புதிய விமான நிலையம் அமையவுள்ளது.
துபாய் விமான போக்குவரத்து துறை முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.
மேலும் புதிய விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படவுள்ளதுடன் புதிய விமான நிலையம் அல்மக்தூம் (Al Maktoum)சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
