பிரித்தானியாவுக்கு இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியான கோவிஷீல்ட்டினை பெற்றவர்களை பிரித்தானியா அங்கீகரிக்க மறுத்துள்ள நிலையில் இது தொடர்பில் பதில் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரித்துள்ளது.
Oxford அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பிரித்தானியாவில் Oxford பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராசெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
அதே தடுப்பூசிதான், இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
அப்படியிருக்கும் நிலையில், பிரித்தானிய நிறுவனத்தின் உரிமம் பெற்ற கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட இந்தியர்களை தடுப்பூசி பெறாதவர்கள் என கருதி, பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் 10 நாட்கள் தனிமைப்படுத்தில் வைக்கும் புதிய விதியினை பிரித்தானியா கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல உலக செய்திகளுடன் இப்படிக்கு உலகம் தொகுப்பு,