இலங்கையின் நம்பகத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி! முதல் முறையாக தலையிடும் உலக வங்கி

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples World Bank IMF Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Aug 28, 2022 12:50 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

இலங்கைக்கான உர விநியோகத்தில் ஈடுபடவுள்ள உலக வங்கி, முதன்முறையாக இலங்கைக்குள் மேற்பார்வை மற்றும் கணக்காய்வை மேற்கொள்ள உள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையின் மோசடி நிர்வாகத்தின் உச்சத்தை கோடிட்டு காட்டுவதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியர் குறிப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் மேற்பார்வை நடவடிக்கை

இலங்கையின் உள்நாட்டில், மோசடி மற்றும் ஊழல் இல்லாத செயல்முறை நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகளுடன் இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

மேலும், இந்த உர விநியோகத்தின் போது, உலக வங்கி, கொள்முதல் செயல்முறை தொடர்பான பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை மேற்பார்வை செய்யும். அத்துடன் வோஷிங்டனை தளமாகக் கொண்ட வங்கியால் நியமிக்கப்பட்டவர்களால் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும்.

இலங்கையின் நம்பகத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி! முதல் முறையாக தலையிடும் உலக வங்கி | World Bank Intervenes In Domestic Administration

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் இரசாயன உரம் இறக்குமதிக்கு எதிரான தற்கொலைப் போர்வைத் தடை இலங்கையின் விவசாயத் துறையை பாரியளவில் பாதித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் பெரும்போக நெற்பயிர் பருவத்துக்காக 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிப்பு வசதியின் ஒரு பகுதியாக, உலக வங்கியின் இந்த திட்டம் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பதிவுகளின்படி, கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள்.

இந்நிலையில் லெபனான், சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கிக்கு அடுத்தபடியாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இருப்பினும் இலங்கையின் சொந்த உணவு உற்பத்திக்காக வழங்கப்படும் நிதியையும் இலங்கையின் உள்ளூர் அதிகாரிகள் நேர்மையாக செலவிடுவார்கள் என்று உலக வங்கி நம்பவில்லை.

இலங்கையில் தேசிய கொள்முதல் கொள்கைகள் இருந்தபோதிலும், உலக வங்கி இந்த செயல்பாட்டில் மோசடி அல்லது ஊழல் இல்லை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் உட்பிரிவுகளை விதித்துள்ளது.

பொருளாதார மீட்சி

இலங்கையின் நம்பகத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி! முதல் முறையாக தலையிடும் உலக வங்கி | World Bank Intervenes In Domestic Administration

சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பான தனது கடைசி அறிக்கையில் 'ஊழல் பாதிப்புகளைக் குறைப்பது' என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளது.

வடக்கின் போருக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் ஊழல் கலாசாரம் சிறு திருட்டுகளில் இருந்து பாரிய ரூபாய்களாக மாறியுள்ளது.

அரசியல்வாதிகளும் சில இராணுவ உயர் அதிகாரிகளும் ஆயுத வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்து ஒரே இரவில் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

போருக்கு பிந்தைய காலத்தில், உள்நாட்டுப் பயங்கரவாதத்தை முறியடித்த மகிழ்ச்சியின் மறைவின் கீழ், அரசாங்கம், ஏனைய நாட்டு அரசாங்க அடிப்படையிலும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் ஏராளமான நிதிகளை பெற்றுள்ளது.

போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி என்ற போர்வையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்க்கரை ஊழல், பூண்டு ஊழல், எரிபொருள் ஊழல், எரிவாயு ஊழல், உர ஊழல், ஊழல் புற்று நிர்வாகத்தின் ஒவ்வொரு நுண்துளைகளிலும் ஊடுறுவியது.

2019 அரசாங்கத்தின் வருகையுடன் அரைகுறையான கோப்புகள் அரசியல் ரீதியாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற கோரிக்கைகள், இலங்கையின் பொருளாதாரம் சரிவடைந்ததன் பின்னரே, மக்கள் எழுச்சியின் மூலம் புதிய உத்வேகத்துடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

37வது ஊழல் நிறைந்த நாடாக இலங்கை

இலங்கையின் நம்பகத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி! முதல் முறையாக தலையிடும் உலக வங்கி | World Bank Intervenes In Domestic Administration

இலங்கையை ஊழல் நிறைந்த நாடாக உலகம் தற்போது தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டத்துக்கு ஒரு புதிய தோற்றம் தேவை. பெருமைமிக்க ஒரு தேசம் இப்போது உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் இடர் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் பிறவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்ட சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில், 180 நாடுகளில் உலகின் 37வது ஊழல் நிறைந்த நாடாக இலங்கை மதிப்பெண் பெற்றுள்ளது.

பெரும்பான்மையான இலங்கையர்கள் அதன் போர்க்கால மனித உரிமைகள் பதிவில் தேவையற்ற வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கலாம். ஆனால் அதன் நிதிப் பதிவின் சில வெளிப்புற கணக்காய்வை அவர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாட்டு ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்டுபவர்களை அடையாளம் காண மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US