திருகோணமலையில் நடைபெற்ற உளவளத்துணை மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான செயலமர்வு
திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுசரணையுடன் உளவளத்துணை மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பாக இரண்டு நாட்கள் கொண்ட செயலமர்வானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு (22) மற்றும் (23) ஆம் திகதிகளில் நடைபெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இதன்போது உளவளத்துணை மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான தெளிவூட்டல்களும், உத்தியோகத்தர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் உளவளத் துணை மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.நசீர்கான் மற்றும் மூதூர் பிரதேச செயலக உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.ரியாத் ஆகியோரால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் கு.ரமணபிரசாந்த் மற்றும் திருகோணமலை பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.