வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நேற்று(11.11.2024) நடைபெற்றது.
தமிழ் மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 10 மணிக்கும், சிங்கள மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 11.30 க்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், வாக்கெண்ணலுக்கான முன்னேற்பாடுகள், 1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம், அனைத்து வாக்குப் பெட்டிகளும் கிடைத்ததன் பின்னர் பின்பற்ற வேண்டிய விடயங்கள், Z அறிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல், வாக்கெண்ணல் நடவடிக்கையை ஆரம்பித்தல், வாக்கெண்ணலின் மூன்று கட்டங்கள், விருப்பு வாக்கெண்ணும் செயன்முறை, விருப்புக்களை மீளெண்ணல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போதுகலந்துரையாடப்பட்டுள்ளது.

மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டல் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri