வவுனியா எரிபொருள் நிலையத்தில் கொடூரம்: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா, பண்டார வன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்றையதினம் (02.09.2024) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென அவர்களில் ஒருவர் அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, போக்குவரத்து பொலிஸார் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்ற போது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு முச்சக்கர வண்டியில் பொலிஸார் வருகை தந்த போது, தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri