மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்!

Jaffna M. K. Shivajilingam Mavai Senathirajah
By Dharu Feb 05, 2025 01:54 AM GMT
Report

யாழ். மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்தபோது தமிழ்ரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் அரசியல் பணி பாராட்டத்தக்கது என சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணம் தொடர்பில் அவர் வெளிப்படுத்திய முகநூல் பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,

சுதந்திர தின நிகழ்வில் கண்ணீர் சிந்திய பிரதி அமைச்சர்

சுதந்திர தின நிகழ்வில் கண்ணீர் சிந்திய பிரதி அமைச்சர்

சமாதான காலம்

“இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் சமாதான காலகட்டத்தில், யாழ் மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்து, மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பின்னர் தீவகத்திலும் அரசியல் பணி மேற்கொள்வதற்காக அரசியல் பணிமனையை ஆரம்பிப்பதற்காக தயார்படுத்தலை மேற்கொண்டோம்.

முதன் முதல் இரண்டு பேருந்துகளில் தீவகம் நோக்கி பயணித்தோம்.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும். பாப்பா அண்ணா தலைமையில் சமகால அரசியல் போராளிகள் தீவாகத்திற்கு சென்றிருந்தோம்.

எங்களோடு மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் வருகை தந்தார்கள்.

அன்று தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் தலைவர்கள் இருந்த பொழுதும் இவர்கள் இருவரை மட்டும் பிரத்யோகமாக எங்களோடு அழைத்துச் சென்றோம். 

இதன்போது அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் எங்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

அந்தச் சோதனை சாவடியில் இருந்த இராணுவ அதிகாரி எங்களுக்கான அனுமதியை தரவில்லை. எங்களை பயமுறுத்தும் விதமாக இராணுவத்தினரின் செயல்பாடுகள் இருந்தன எங்களை சுத்தி வளைத்து விட்டார்கள்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கண்காணிப்பு குழு 

30 நிமிடங்களை கடந்து அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தன. மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் எங்களை வாகனத்தில் இருந்து இறங்க விடவில்லை. இறங்கிச் சென்ற மாவை ஐயா இராணுவத்தினருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார். 

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

அவர் அன்று ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆயுதம் இல்லாமல் குப்பியோடு வந்திருக்கிறார்கள் என்று உங்களுடைய வீரத்தை காட்டாதீர்கள் என சத்தமாக கத்தி பேசினார். 

உடனடியாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு மற்றும் 512 ஆவது இராணுவ தளத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

அவர்கள் வருகை தந்த பின்னர் எங்களுடைய பயணம் தொடர்ந்தது.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

மீண்டும் பயணம் ஆரம்பித்ததும் மாவை ஐயாவின் துணிவை அரசியல் துறை பொறுப்பாளர் பாப்பா அண்ணா பாராட்டினார் குயிலன் அண்ணாவும் மாவை ஐயாவை பார்த்து நீங்கள் சரியான கோபக்காரர் போல் தெரிகிறது ஐயா என்றார்.

மேலும் ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் அறியாத விதத்தில் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இதற்காக பிரத்யோகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. பல படையணிகளை சார்ந்த போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

அண்ணளவாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அறிக்கை தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகள் சிறப்பாக இருந்தன. சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவுக்கு அடுத்ததாக அதில் மாவை ஐயாவும் ஒருவர்.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

மாவைக்கு பாராட்டு 

நான் குறிப்பிடும் தகவல்கள் சமாதான காலகட்டத்தின் தகவல்கள். தரவுகளை சேகரித்து அறிக்கை தயார் செய்த போராளிகளுக்கு மத்தியில், அறிக்கைகளை பார்வையிட்ட பின்னர் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்ணன் பாராட்டிய ஒருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ஐயாவும் ஒருவர்.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

தரவுகள் அறிக்கையின் பிரகாரம் அதிக விமர்சனத்திற்கு உட்பட்ட ஒருவர் சம்பந்தன் ஐயாவாக இருந்தார்.

2009 யுத்தம் முடிவின் இறுதி காலகட்டமும் யுத்த முடிவின் பின்னர் அவருடைய இறுதி பதினைந்து ஆண்டுகளில் அவருடைய அரசியல் வாழ்வில் சில விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழ் மக்களுக்காக 50 ஆண்டுகளை கடந்த அரசியல் பயணம் பல தடவை மக்களின் பிரதிநிதியாக இனத்திற்காக பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தலைவர் மாவை ஐயா. அவருடைய ஆன்மா இளைப்பாறட்டும் பிரார்த்தித்துக் கொள்வோம்” என்றுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US