அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Bavan Oct 02, 2024 11:10 AM GMT
Report

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஆரையம்பதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தையுள்ள ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில், அங்கு 33 வயதுடைய பெண் ஒருவரை தான் திருமணம் செய்யவில்லை என தெரிவித்து காதலித்து வந்துள்ளார்.

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பரிதாப நிலை

இந்தநிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவரை தேடி குறித்த பெண் கடந்த ஜூன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று காதலனை சந்தித்த போது, அவர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டுள்ளார்.

அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது | Women Who Stole Gold Arrested

தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் பிரச்சினை ஏற்பட, ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

அதன் பின்னர், அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், ஏமாற்றப்பட்ட பெண்ணின் பிரச்சினையை கேட்டறிந்து, அவரின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அவரை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

நீதவான் உத்தரவு

இவ்வாறு 3 தினங்கள் கடந்த நிலையில் ஜூன் 10ஆம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்கு அருகாமையில் ஒளிந்திருந்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டை பூட்டிவிட்டு கதவின் திறப்பை வழமைபோல ஒளித்து வைக்கும் இடத்தில் ஒளித்துவைத்துவிட்டு கடமைக்கு செல்லும்வரை காத்திருந்துவிட்டு, அங்கு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த கதவின் திறப்பை எடுத்து கதவை திறந்து அங்கிருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது | Women Who Stole Gold Arrested

கடமை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர், வீட்டின் கதவை திறந்தபோது தனது தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளதை கண்டுகொண்ட அவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதேவேளை திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகி வந்த நிலையில் அவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று (01.10.2024) செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தியபோது, அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மக்களின் பணத்தில் சொகுசு மாளிகை நிர்மாணித்த அரசியல்வாதி - மோசடியில் சிக்கிய நபர்

மக்களின் பணத்தில் சொகுசு மாளிகை நிர்மாணித்த அரசியல்வாதி - மோசடியில் சிக்கிய நபர்

நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US