உறக்கத்தில் உயிரிழந்த இளம் பெண் - பிரேத அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
தம்புளையில் உறக்கத்தில் உயிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் ஒரு கொலை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சாட்சியமளிக்க வந்த உயிரிழந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள தம்புளை தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 34 வயதான தாருகா கௌசல்யா நிஸ்ஸங்க என்ற ஒரு பிள்ளையின் தாயார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்
குறித்த பெண் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள வீட்டின் அறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
கணவன் வாக்மூலம்
அவரது மனைவி பரீட்சை ஒன்றுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்கு சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவர் எழுந்திருக்காததால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து 1990 அம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்மூலம் வழங்கியுள்ளார்.



