அமைச்சர் பந்துலவை பகிரங்க இடத்தில் திட்டிய பெண்கள்
கதிர்காமத்தில் உள்ள சதொச சிறப்பு அங்காடிக்கு இன்று காலை சென்ற வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவை,(Bandula Gunawardane) அங்கிருந்த பெண்கள் மிக மோசமாக திட்டியுள்ளதாக தெரியவருகிறது.
சிங்கள இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. “அரிசி இருக்கின்றதா என பார்க்க வந்துள்ளார். மக்களுக்கு உண்பதற்கும் இல்லை” எனக் கூறியே பெண்கள் திட்டியுள்ளனர்.
இதனால், அசௌகரியத்திற்கு உள்ளான அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போதைய சூழ்நிலையில், இருப்பவற்றை வழங்குவது குறித்து மகிழ்ச்சியடையுங்கள் என கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி உட்பட அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
