இலங்கையில் மீண்டும் ஆபத்து - மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று பதிவாகி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மழை நிலைமை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்
அதற்கமைய, கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர மற்றும் மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இடங்கள் நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அந்த இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan