தமிழ் தேசிய கட்சிகளிடம் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் 25வீத பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டோம். ஆனால் ஒற்றுமையின்மை காரணமாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது. ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாகவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும். தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்றோம்.
அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகின்றனர்.
உள ரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை. வெறுமனே பேச்சளவிலேயே உறுதி கூறுகின்றனர்.
எனவே, வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
