யானை சின்னத்தில் களமிறங்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புக்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதேவேளை, எரிபொருள் கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் குறித்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இடம்பெற்ற கலந்துரையாடல்
எதிர்வரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது, எரிவாயு கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை சின்னத்தில் அல்லது வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
