கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் உள்ளிட்ட இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முயன்ற இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் இன்று (15.09.2023) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவர்களில் ஒருவர் 26 வயதான இந்தியப் பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய பெண் கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இலங்கை பிரஜை எனவும், கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri