ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி
மிரிஹான பிரதேசத்தில் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் தங்க சங்கிலியை திருடிய தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு லட்சம் பெறுமதியான தங்க சங்கிலி ஒன்று திருப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவரால் திருடப்பட்ட தங்க சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எத்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராகும்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய ஆடை அணிவதற்காக அவரை அறைக்கு அழைத்து செல்லும் போது அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.
மிரஹான பொலிஸாரினால் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்