இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த உக்ரைனிய பெண்
ரஷ்யா - உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளிலுள்ள உக்ரைனியர்கள் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள உக்ரைனிய பெண்ணொருவர் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார். யுத்தம் வேண்டாம் என்ற பதாதைகையுடன் தனியொருவராக கோஷம் எழுப்பினர்.
குறித்த பெண்ணின் செயற்பாடு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளும் அவதானித்தனர். இலங்கையில் அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முன்தினம் கொழும்பில் ஒன்று கூடிய உக்ரைனிய பிரஜைகள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri