வவுனியாவில் தானியங்கி இயந்திரத்தில் பணத்தை திருடிய பெண்
வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் வேறொருவரின் பணத்தை திருடிய பெண் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (19) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திற்கு சென்ற பெண் ஒருவர் 17 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது இயந்திரத்தின் அறிவுறுத்தலை சரியாக அவதானிக்காத அவர் தனது அட்டையினை மாத்திரம் மீளவும் பெற்றுக்கொண்டதுடன், பணத்தினை எடுக்காமல் சென்றுள்ளார்.
இதனை அருகிலிருந்து அவதானித்து கொண்டிருந்த மற்றொரு பெண் இயந்திரத்திலிருந்து வெளியில் வந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து தனது பையினுள் மறைத்து வைத்துள்ளார்.
எனினும் குறித்த பணம் திருடப்பட்டுள்ள விடயம் அங்கிருந்தவர்களின் மூலம் பணத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அத்துடன் பணத்தினை திருடிய பெண்ணை எச்சரித்த நிலையில் அவர் தானே அதனை திருடியதாக ஒப்புக்கொண்டதுடன், பணத்தினை உரிமையாளரிடம் மீளவும் வழங்கியிருந்தார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam