வீட்டுக்கு வந்த குரங்குகளால் உயிரிழந்த பெண்
குருணாகல் கலேவல பிரதேசத்தில் புளியமரம் ஒன்றின் கிளை உடைந்து தலையில் விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
62 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் வசித்து வந்த வீட்டுக்கு நேற்று மாலை குரங்கு கூட்டம் ஒன்று வந்துள்ளதுடன் அவற்றை விரட்டுவதற்காக பெண் வீட்டுக்கு பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது இந்த பெண் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் புளியமரத்திற்கு அடியில் சென்றுள்ளதுடன் அதில் இருந்த குரங்குகள் கிளையை உலுப்பியுள்ளன.

இதனால், மரக்கிளை உடைந்து கீழே நின்ற பெண்ணின் தலையில் விழுந்துள்ளது.
புளியமரக்கிளை தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த பெண் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam