அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள்

Sri Lanka Police Ampara Jaffna
By Farook Sihan Sep 06, 2025 11:58 PM GMT
Farook Sihan

Farook Sihan

in குற்றம்
Report

அம்பாறையில் குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..

பிரதான சந்தேகநபர் 

குறித்த கைது நடவடிக்கை, படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்தனர். 

அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள் | Woman Killed Ampara Police Investigate In Jaffna

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் வெள்ளிக்கிழமை (05) கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளனர்.

இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி

சி.சி.டிவி கெமரா

இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள் | Woman Killed Ampara Police Investigate In Jaffna

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.

மேலும், இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. 

இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US