முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க நகையை திருட முயற்சித்த பெண்
ஹட்டனில் ஒரு பக்கத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க மாலையை திருட முயன்ற, பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் கடந்த 01ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், நாளையதினம்(05) வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
ஆரம்பகட்ட விசாரணைகள்
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், ஒரு குழந்தையின் தாய் ஆவார்.
குறித்த பெண், மஸ்கெலியா உப்காட் பகுதியில் சிறிது காலம் வசித்து வந்ததாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி ஹட்டன் வந்த அவர், நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
பற்றுசீட்டுக்கள்
இதன்போது, பெண்ணின் இடது கை அவரது கைப்பைக்குள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து திரவ போத்தலொன்றை எடுத்து கடை உரிமையாளரின் மீது தெளித்துள்ளார்.
எனினும், கடை உரிமையாளர், குறித்த பெண்ணை கட்டுப்படுத்தி, அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தனது தந்தையின் சிகிச்சை செலவுக்காகவே இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் நகையை திருடிய பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து தங்க நகைகளை அடகு வைத்ததற்கான பல பற்றுசீட்டுக்கள் அவரது பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 23 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
