கொழும்பு நோக்கிச்சென்ற சொகுசு தொடருந்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு தொடருந்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாலியபுரப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இன்று (28) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாலியபுர பகுதியை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான 29 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து கடவையில் பாதுகாப்பு
அனுராதபுரப் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றிற்கு சுயதொழில் நடவடிக்கைக்காக சென்று தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த தொடருந்து கடவையில் பாதுகாப்பு கடவை நிறுவப்படவில்லை என்றும், தொடருந்து கட்டுப்பாட்டாளரும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், தண்டவாளம் இருபுறமும் வளைந்து நெளிந்து செல்வதால், தண்டவாளத்திற்குள் நுழையும் வரை இருபுறமும் உள்ள சாலைகள் தெரிவதில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.