இறுதி சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பகுதியை சேர்ந்த பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச்சென்று கொண்டிருந்த அரச பயணிகள் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்று பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை மஹியங்கனை பேருந்தில் ஏறியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam