யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்றையதினம்(19) திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 50 வயதுடைய கேதீஸ்வரன் சசிகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீரென மயக்கம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகியவேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இந்நிலையில் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
