வவுனியாவில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா - தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அமல உட்பவம் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மரணம் தொடர்பான விசாரணைகள் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிசோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri