கைதிக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் கைது : செய்திகளின் தொகுப்பு
களுத்துறை (Kalutara) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு போதைப்பொருளை ஷாம்பு போத்தலில் மறைத்து வைத்து கொடுக்க கொண்டு சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொண்டு வந்த ஷாம்பு போத்தலில் பெண் சிறைக்காவலர்களால் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, போத்தலில் 9000 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6410 மில்லிகிராம் கஞ்சா காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்காக பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |