ஜேர்மன் பிரஜையொருவருக்கு சொந்தமான காணியை ஆக்கிரமிக்க முயற்சித்த கிளிநொச்சி பெண்
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள ஜேர்மன் பிரஜையொருவருக்கு சொந்தமான குடியிருப்பு காணியை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் துணையுடன் பெண்ணொருவர் ஆக்கிரமிக்க முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்தில் பதிவு
கிளிநொச்சி பரந்தன் மூன்றாம் ஒழுங்கை பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த நபர் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் போது தனது காணிக்கான ஆவணங்களுடன் கண்டாவளை பிரதேச செயலகத்தில் தனது பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த காணியை அடாத்தாக பிடிக்க முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் குறித்த காணி உரிமையாளரானவர் பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர் கிராம அலுவலர் ஆகியோரிடம் முறைப்பாடுகளை செய்துள்ளார்.
இதற்கமைய விசாரணைகளின் அடிப்படையில், காணியை ஆக்கிரமித்த பெண் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காத நிலையில், பிரதேச செயலகத்தினால் குறித்த பெண்ணை வெளியேறுமாறும் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் காணியை விட்டு வெளியேறியிருந்தார்.
பெண்ணின் அடாவடித்தனம்
நீண்ட நாட்களாக யாரும் குடியிருக்காத குறித்த காணியை மீளவும் ஜேர்மனியிலிருந்து வந்த காணி உரிமையாளர் அதற்குள் காணப்பட்ட அரை நிரந்தர வீட்டை அகற்றி காணியை துப்புரவு செய்துள்ளார்.
இதன்போது அந்த பெண் கடந்த ஞயிற்றுக்கிழமை அடியாட்களுடன் சென்று வன்முறையில் ஈடுபட்டதால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
அத்துமீறி காணியை ஆக்கிரமிக்க முயற்சித்த பெண்ணுக்கு காணியை பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் முகநூலில் கருத்துக்களை வெளியிட்டு அரசியல் இலாபம் தேட முற்பட்டமையானது பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.














பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
