கம்பஹாவில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைமாத்திரையுடன் பெண் கைது
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள பாடசாலை சிற்றுண்டிச்சாலையொன்றில் ஐஸ் மற்றும் 38 வில்லைகள் அடங்கிய 7 போதைப்பொதிகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (05.12.2022) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் குறித்த பாடசாலையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளாதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.