பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் மரணம்
பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
43 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரியப்படுத்திய போதிலும் பொலிஸ் அதிகாரிகள் அதனை கண்டுக் கொள்ளாமையினால் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கமைய ஒரு தரப்பினர் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த பெண் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் தொடர்பில் உயிரிழந்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனக்கு சுகயீனமாக உள்ளதென கூறிய போதிலும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேலியகொட, கெமுனு மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
