மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்
மூச்சி திணறல் ஏற்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளம் பெண்ணொருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது திடீர் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலி கலேகானா பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு 10 வயது மகள் இருப்பதுடன் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.
உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் கருணாதில்கக மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி யு.சி.பி. பெரேரா மேற்கொண்டுள்ளார்.
பெண்ணின் மரணத்திற்கு காரணமாக கோவிட் நிமோனியா என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam