மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்
மூச்சி திணறல் ஏற்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளம் பெண்ணொருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது திடீர் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலி கலேகானா பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு 10 வயது மகள் இருப்பதுடன் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.
உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் கருணாதில்கக மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி யு.சி.பி. பெரேரா மேற்கொண்டுள்ளார்.
பெண்ணின் மரணத்திற்கு காரணமாக கோவிட் நிமோனியா என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
