எச்சரிக்கை - “ஒமிக்ரோன்” ஊடாக இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை
ஒமிக்ரோன் காரணமாக எதிர்வரும் பெப்ரவரிக்குள் 3-வது கொரோனா அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
விஞ்ஞானியான மனிந்திர அகர்வால் இதனை கணித்துள்ளார்.
கொரோனா உருமாறிய தொற்று 3-வது அலையாக ஒக்டோபருக்குள் இந்தியாவை தாக்கும் என்று முன்னதாக விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.
எனினும் இது ஏற்படவில்லை
இந்தநிலையில் வருகிற பெப்ரவரிக்குள் ஒமிக்ரோன் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானி மனிந்திர அகர்வால் எச்சரித்துள்ளார்.
இதன்போது இந்தியாவில் நாளாந்தம் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.